தில்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து, இன்று திஹார் சிறையில் இருந்து வெளியேறினார் கனிமொழி. சுமார் 6 மாதங்கள் அவர் திஹார் சிறையில் இருந்துள்ளார். அவருக்கு நேற்று ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து, உயர்நீதிமன்றம் மற்றும் சிறை நடைமுறைகளை முடித்துவிட்டு, இன்று மாலை அவர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியேறினார். அவரை வரவேற்க திமுகவினர் காத்திருந்தனர். கனிமொழியின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். கனிமொழி வரும் டிசம்பர் 3ம் தேதி சென்னைக்கு வருவார் என்று திமுக ஏற்கெனவே அறிவித்திருந்தது.
No comments:
Post a Comment
படிச்சுட்டு சும்மா போனா எப்படி? எதையாவது எழுத்திட்டுப் போங்கப்பூ..!!