Feb 22, 2012

மின் வெட்டு இரண்டு ஆண்டுகள் தொடரும் அமைச்சர் விஸ்வநாதன் ஒப்புதல்!


இன்று செடி நட்டு நாளை பலனை எதிர்பார்க்க முடியாது. புது மின் திட்டங்கள் செயலுக்கு வர ஒன்றரை ஆண்டுகள் ஆகும். அதுவரை சிரமத்தை பொறுத்துக் கொள்ள தான் வேண்டும்.என்று  விஸ்வநாதன் பேசினார்.
 திண்டுக்கல்லில், தோல் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய மேம்பாட்டு திட்டங்களின் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. உயர்மட்ட மாசுக் கட்டுப்பாட்டு குழு தலைவர் முகமது ஹாசிம் தலைமை வகித்தார்.விழாவில் அமைச்சர் பேசியதாவது:மின் பற்றாக்குறை தவிர்க்க முடியாததாக உள்ளது. இதற்கான காரணத்தை விளக்கினால், அது அரசியல் பிரச்னையாகி விடும். இதைக் கூறி பொறுப்பை தட்டிக்கழிக்க அரசு விரும்பவில்லை. இரண்டு, மூன்று மாதங்களில், படிப்படியாக மின்தடை நேரம் குறையும்.வரும் 2013ல், மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும். என்றார் கடந்த ஆட்சியில் மின்வெட்டை பற்றி
புள்ளிவிவரத்தோடு பேசியவர் இப்போது பல்டியடிகிறார் ஓட்டு போட்டமக்கள் அனுபவிக்கிறார்கள் வாழ்க ஜனநாயகம் !

1 comment:

Unknown said...

அன்புடைய நண்பரே! உங்களுடைய பதிவினை ரசித்து! உங்களுக்கு சகபதிவர்களை கவுரவிக்கும் பொருட்டு ஜெர்மானிய Liebster Blog விருதினை என் வலைதளத்தில்

வழங்கியுள்ளேன் தாங்கள் ஏற்றுக்கொண்டால் எனக்கு மிக மகிழ்ச்சியிளிக்கும் உங்களை அன்புடன் எதிர்பார்த்து

அன்புடன்
வீடு K.S.சுரேஸ்குமார்


"விருதுகள் எனும் ஊக்கமருந்து!"