Dec 5, 2011

கூடலூரில் சாலை மறியல், பள்ளிகளுக்கு விடுமுறை! :முல்லை பெரியார் விவகாரம்


முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும் கேரள அரசின் முடிவை கண்டித்து, கூடலூரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது, கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி, முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் ஆகியோரின் உருவப் பொம்மைகளும் எரிக்கப்பட்டன.

தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்களையும் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதால், போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால், கூடலூரில் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் இருந்து சென்ற இரண்டு லாரிகளை, நேற்று நள்ளிரவு கேரள இளைஞர் காங்கிரசார் அடித்து நொறுக்கியுள்ளனர். சபரிமலை செல்லும் தமிழக ஐயப்பப் பக்தர்கள் தாக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. சபரிமலைக்கு செல்லும் தமிழக பக்தர்களுக்கும், வாகனங்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

No comments: