Nov 29, 2011

மாவட்ட எஸ்பி எச்சரிக்கையையும் மீறி ஜெயலலிதா உருவபொம்மை எரிப்பு

ஜெயலலிதா உருவபொம்மையை எரித்தால் கைது செய்வோம் என்று இடுக்கி மாவட்ட எஸ்பி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அந்த எச்சரிக்கையையும் மீறி சில இடங்களில் ஜெயலலிதா உருவபொம்மை எரிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரளாவின் இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா ஆகிய 4 மாவட்டங்களில் இன்றும் பந்த் நடைபெற்று வருகிறது.இந்த பந்த்தில் நேற்று கலந்துகொண்டவர்களுடன் இன்று பாஜக, நாயர் சமுதாய பேரவை உள்ளிட்ட சில அமைப்பினர் கூடுதலாக கலந்துகொண்டுள்ளனர்.
பந்த்தின்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரின் உருவபொம்மையை சில இடங்களில் போராட்டக்காரர்கள் எரித்தனர்.

No comments: