Nov 25, 2011

நடிகர் விக்ரம் படம் `கரிகாலன்' கதை சர்ச்சை:போலீஸ் கமிஷனரிடம் புகார்

நடிகர் விக்ரம் நடிக்கும் `கரிகாலன்' படக்கதைக்கு சொந்தம் கொண்டாடி டி.வி. தொடர் இசையமைப்பாளர் ஒருவர், போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார்.அவரது பெயர் ராஜசேகரன் என்ற நாகராஜ் (41) என்பதாகும். இவர், சென்னை போரூரை சேர்ந்தவர். நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார்.அதில் அவர்,  ‘’நான் டி.வி. தொடர் இசையமைப்பாளராக உள்ளேன். நடிகர் விக்ரம் நடித்து, விரைவில் வெளிவரவுள்ள `கரிகாலன்' படக்கதை என்னுடைய கதையாகும்
.அந்த கதையை நான் முறையாக பதிவு செய்து வைத்துள்ளேன். இந்த கதையை வைத்து படம் எடுக்க பல்வேறு படக்கம்பெனிகளை தொடர்பு கொண்டு வந்தேன்.இப்போது அந்த கதையை வைத்து என்னிடம் அனுமதி பெறாமல் `கரிகாலன்' படம் எடுக்கப்படுகிறது. விரைவில் அந்த படம் வெளிவர உள்ளது.இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
`கரிகாலன்' படம் வெளிவருவதற்கு முன்பு உரிய நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொள்கிறேன்’’என்று கூறப்பட்டுள்ளது.இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
:    


No comments: