Nov 24, 2011

மத்திய அமைச்சர் சரத்பவார் கன்னத்தில் அறைந்த இளைஞர் கைது : டெல்லியில் பரபரப்பு

மத்திய வேளாண்த்துறை அமைச்சர் சரத்பவார் மீது சீக்கிய இளைஞர் ஒருவர், கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்.டி,எம்.சி அரங்கில் நடைப்பெற்ற விழாவில் சரத்பவார் கலந்து கொண்டு திரும்புகையில் எதிர்பாராத விதமாக, ஹர்விந்தர் சிங் என்ற அந்த இளைஞர், பவாரின் கன்னத்தில் அறைந்தார்.
இதனையடுத்து சரத்பவார் அருகே இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த இளைஞரை தாக்கிய பின் கைது செய்தனர். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு மத்திய அமைச்சர் சரத்பவாரே காரணம் என்று அந்த இளைஞர் கோஷமிட்டார்.மேலும் சரத்பவாரை கொல்லதான் நினைத்தேன் என்று கூறிய அந்த இளைஞன், விளம்பரத்துக்காக அவர் கன்னத்தில் அறையவில்லை என்று கூறி தனது கையை கத்தியால் கிழித்துக் கொண்டார். மேலும், நாட்டின் எல்லா பகுதிகளிலும் ஊழல் தலை விரித்து ஆடுகிறது. அதை தன்னால் பொருத்தக் கொள்ள முடியவில்லை என அந்த இளைஞர் ஆவேசமாக கூறினார். இந்த சம்பவம் புதுடெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே இளைஞர் தான், ஊழல் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராம் மீது தாக்குதல் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: