Nov 23, 2011

தமிழகம் முழுவதும் குண்டு வைக்க திட்டமிட்ட தீவிரவாதி கைது




தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த தீவிரவாதி தவுபீக்,    தமிழ்நாட்டில் நடந்த பல்வேறு தீவிரவாத செயல்களில் தொடர்புடையவன்.

 கடந்த 2008-ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து வந்தான்.

மேலும் இறைவன் ஒருவனே என்ற பெயரில் மறைமுகமாக தீவிரவாத இயக்கம் நடத்தியதோடு,


தமிழகம் முழுவதும் குண்டு வைக்க திட்டமிட்ட திடுக் கிடும் தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.
இதனை தொடர்ந்து டெல்லி அருகே உத்தரபிரதேச மாநில எல்லையில் தவுபீக் பதுங்கி இருப்பதாக தமிழக சிறப்பு புலனாய்வு குழுவுக்கு கிடைத்த தகவலையடுத்து அவர்கள் உத்தரபிரதேசம் விரைந்தனர். அங்கு நொய்டாவில் அவனை கைது செய்தனர்.

தமிழ்நாட்டில் உள்ள வழக்குகள் பற்றி விசாரணை நடத்துவதற்காக அவனை சென்னைக்கு கொண்டு வருகிறார்கள்

No comments: