கடந்த நவம்பர் 26ம் தேதி, பாக்., ஆப்கன் எல்லையில் சலாலா எல்லைச் சாவடி மீது நேட்டோ நடத்திய தாக்குதல் குறித்து அமெரிக்காவில் இருந்து வெளிவரும் "வால்ஸ்ட்ரீட் ஜர்னல்' சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, சலாலா எல்லைப் பகுதியில் இருந்து முதன் முதலில் ஆப்கன் எல்லைப் பகுதியில் இருந்த அமெரிக்க வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்குப் பதிலடி கொடுப்பதற்கு முன்பாக, அமெரிக்க, ஆப்கன் மற்றும் பாகிஸ்தானிய அதிகாரிகள் அடங்கிய எல்லைக் கட்டுப்பாட்டு மையத்தை நேட்டோ தொடர்பு கொண்டது. சம்பந்தப்பட்ட இடத்தில், பாக்., ராணுவ வீரர்கள் உள்ளனரா என நேட்டோ அதிகாரிகள் கேட்டுள்ளனர். இதற்குப் பதிலளித்த பாக்., அதிகாரிகள்,"சலாலா எல்லைப் பகுதியில் பாக்., வீரர்கள் யாரும் இல்லை; தாக்குதல் நடத்தலாம்' எனக் கூறியுள்ளனர். ஆனால், எல்லைச் சாவடியில் பாக்., வீரர்கள் இருந்தது அவர்களுக்குத் தெரியவில்லை
Dec 2, 2011
புதிய அடையாள குறியுடன் ரூ.10, ரூ.1000 நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
உலகின் முன்னணி நாடுகளில் இருந்து வெளியாகும் கரன்சிகளில் பிரத்யேக அடையாள குறிகள் இடம் பெற்று இருப்பதை காணலாம். ஆனால், வளர்ந்த நாடான இந்தியாவில் வெளியிடப்படும் கரன்சிகளில் பிரத்யேக அடையாள குறி கிடையாது.
ரூபாய் என்பதை குறிக்கும் வகையில் ஆர்.எஸ்.என்று பண மதிப்புக்கு முன்னாடி போடப்படுகின்றன. அந்த குறையை போக்கும் வகையில், சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் உருவாக்கிய பிரத்யேக அடையாள குறியை ரிசர்வ் வங்கி எற்றுக் கொண்டது.
அந்த புதிய அடையாள குறி, நாணயங்களில் மட்டுமே தற்போது பயன்படுத்தப்படுகிறது. ஆனால், கரன்சிகளில் இதுவரை பயன்படுத்தவில்லை. விரைவில் புதிய அடையாள குறியை தாங்கி ரூபாய் நோட்டுகள் வெளிவர உள்ளன. இதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
இதுபற்றி, ரிசர்வ் வங்கியின் செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
புதிய அடையாள குறியுடன் முதல் முதலில் ரூ.10, ரூ.1000 நோட்டுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. அடுத்த ஆண்டு துவக்கத்தில் விழாக்கால சீஷனில் இந்த வகை நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. பழைய நோட்டுகள் படிப்படியாக திரும்ப பெறப்படும். அடுத்த கட்டமாக அனைத்து மதிப்பிலான ரூபாய் நோட்டுகளிலும், புதிய அடையாள குறி பயன்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவைப்போல வாய்தா வாங்காமல் துணிவோடு சட்டப்படி சந்திப்பேன்: மு.க.ஸ்டாலின்
Dec 1, 2011
அமெரிக்க கிரீன் கார்டு இந்தியர்கள் சுலபமாக பெற வருகிறது புதிய சட்டம்!
இந்தியா மற்றும் சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு கிரீன்-கார்டு பெற்று செல்ல விரும்பும் ஆட்களுக்கு, கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறது அமெரிக்க காங்கிரஸ்! 389 பேர் ஆதரவாக (வெறும் 15 பேர் எதிராக) வாக்களித்துள்ள குடிவரவு மசோதா ஒன்று, அதிகளவில் ஸ்கில்ட் ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் இந்தியா மற்றும் சீனாவிலிருந்து அதிகளவான ஆட்களுக்கு அமெரிக்கக் கதவுகளைத் திறந்து விட்டுள்ளது.
அமெரிக்காவில் கிரீன் கார்டு வழங்கும் முறையில் பெரிய மாற்றம் ஒன்றைக் கொண்டுவருகின்றது இந்த மசோதா. High-Skilled Immigration Act (H.R. 3012) என்ற பெயரில் நடைமுறையில் உள்ள இந்த இமிகிரேஷன் முறை இதுவரை இந்தியர்களுக்கு பாதகமாகவே இருந்து வந்தது.
கச்சத்தீவு இந்திய மீனவர்களுக்கு சொந்தமானதல்ல : இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்
புனித அந்தோனியார் தேவாலய திருவிழா மற்றும் மீன்பிடி வலைகளை காய வைத்துக் கொள்தற்காக மட்டுமே கச்சதீவை இந்திய மீனவர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
கச்சத்தீவை இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கவில்லை.
1974ம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் கச்சத்தீவு தொடர்பான உத்தியோகபூர்வ உரிமையை இலங்கை உறுதிப்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவு இலங்கைக் கடல் எல்லைக்குள் அமைந்துள்ளதாக அமைச்சர் கிருஸ்ணா குறிப்பிட்டுள்ளமையை ஜீ.எல் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது ஜி எல் பீரிஸ் இந்த பதில்களை வழங்கினார்
Subscribe to:
Posts (Atom)