Jan 21, 2012

அறிஞர் அண்ணா: ஒரு சிறப்புப் பார்வை


தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணா அவர்களைப் பற்றிப் புகழ்பாடாத அரசியல் இயக்கங்களோ தனிமனிதர்களோ இருக்கமாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். ஆனால் அவர் உயிர் வாழ்ந்த காலத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவர் ஏற்றுக்கொண்ட கொள்கைகளும் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாயின. 

கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு" என்ற அண்ணாவின் முழக்கம் தமிழகத்தில் புகழ் பெற்ற ஒன்றாகும்.

அதுபோன்றே " எதையும் தாங்கும் இதயம் வேண்டும் ,மறப்போம் மன்னிப்போம்,கத்தியை தீட்டாதே புத்தியைத் தீட்டு, எங்கிருந்தாலும் வாழ்க, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம், சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீலின் வாதம் ஒளி விளக்கு, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு,

இதுபோன்ற பிரபலமான வசனங்களும் அண்ணாவின் எழுத்தாற்றலுக்கும்,பேச்சாற்றலுக்கும் மிக சிறந்த எடுத்துகாட்டுகளாகும்.

புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த ஈடுபாடுகொண்டவர். வாசிக்கும் திறந்தான் ஒரு மனிதனை அறிவுடையவனாக அடையாளம் காட்டும்என்பார் அண்ணா.பழைய மூர் மார்க்கட்டில் இருந்த யுனிவர்சல், சென்னை ஹிக்கிம்பாதம்ஸ், இந்த இரண்டு கடைகளுக்கும் வரும் அத்தனை ஆங்கில புத்தகங்களையும் வாங்கிவிடுவார்.

ஹிக்கிம்பாதம்ஸ் எடுத்த கணக்கின்படி மைசூர் மகாராஜா சாம்ராஜ் உடையாரும்,அண்ணாவும்தான் அந்தக் காலத்தில் அதிகமான புத்தகங்கள் வாங்கியவர்கலாம்.

ஓர் இரவு திரைப்படத்தின் மொத்த வசனத்தையும் (360 பக்கங்கள் கொண்டது) ஒரே நாள் இரவிலேயே எழுதி முடித்தார். எந்த பொதுக் கூட்டத்திற்கு வந்தாலும் தாமதமாகத்தான் வருவார்.

முன்னால் வந்தால் அடுத்தவரை பேசவிடாமல் செய்துவிடுகிறார்கள்,அதனால் ஊறுக்கு வெளியில் நின்று அனைவர் பேச்சையும் கேட்டுவிட்டு கடைசியில் வருகிறேன் என்பார்.

இத்தாலிக்கு சென்ற அண்ணா போப்பாண்டவரை சந்தித்து, கோவா விடுதலைக்குப் போராடி போர்ச்சுக்கல் சிறையில் இருக்கும் "மோகன் ரானடோவை" விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

அண்ணாவின் கோரிக்கையை ஏற்று மோகன் ரானா விடுதலை செய்யப்பட்டார். விடுதலையான ரானடே, அண்ணாவிற்கு நன்றி சொல்ல சென்னை வந்தார். ஆனால் அண்ணா இறந்துபோயிருந்தார்.

வாழும்போதும் சரித்திர நாயனாக வாழ்ந்த அண்ணா தன இறப்பிலும் ஒரு சாதனையை படைத்துவிட்டார். ஆம், அண்ணாவின் இறுதி அஞ்சலியின் போது திரண்ட கூட்டம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற கூட்டம்.
 தமிழகமே கண்ணீர் விட்டு அழுதது. ஏடுகள் தலையங்கங்கள் தீட்டின. கவிஞர்கள் இரங்கல் கவிதைகளை இயற்றினர். எல்லாவற்றிலும் ஏக்கமே தெரிந்தது. இதோ ஒரு கவிதையைப் பாருங்கள்.

மேகம் கருகருத்து
மின்னல் எழக்கண்டே
தாகம் தணியமழை
சாய்க்கும் என்று காத்திருந்தேன்
நெஞ்சம் வறண்டதுவே,
தென்மேகம் தீய்ந்ததுவே!

------ சாலை இளந்திரையன் 

1806 ம் ஆண்டு மறைந்த பிரிட்டன் துணைத் தளபதி நெல்சன், 1907 ம் ஆண்டு மறைந்த எகிப்து ஜனாதிபதி கமால் அப்துல் நாசர் ஆகியோருக்கு கூடிய கூட்டத்தை அடுத்து அதிகம் கூடியது அண்ணாவுக்குத்தான் என்கிறது உலக சாதனை புத்தகமான " கின்னஸ் ".

" வங்க கடலோரம் துயில் கொள்கிறான் அந்த தங்கத் தமிழன் அறிஞர் அண்ணா 

Jan 17, 2012

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் வைகோ வாதாடினார்!

 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் வைகோ ஆஜராகி வாதாடினார். தூத்துக்குடியில் செயல்படும் ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என என சென்னை ஐகோர்ட் 2010 செப்டம்பர் 28ல் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஆலை நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. வழக்கின் விசாரணை நடந்தது. நீதிபதிகள் லோதா, கோகலே ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வைகோ நேரில் ஆஜராகி வாதாடுகையில், ஸ்டெர்லைட் ஆலை கோவா, குஜராத்தில் அனுமதி பெற முடியாமல், மகாராஷ்ட்ர மாநிலத்தில் மாநில அரசின் அனுமதிக்கு எதிராக மக்கள் போராட்டத்தால் ரத்து செய்த பின்னர் தூத்துக்குடியில் 1994ல் நிறுவப்பட்டது. தேசிய கடல் பூங்கா எனும் 21 தீவுகள் இருக்கிற கடற்கரையிலிருந்து 25 கி.மீ.க்கு அப்பால்தான் ஆலையை நிறுவ வேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனையை மீறி இந்த ஆலை அமைக்கப்பட்டதாலும் அதுபோல பசுமை வளாகம் நிபபந்தனைப்படி அமைக்கப்படாததாலும் சுற்றுச்சூழலை, நிலத்தை, நீரை, காற்றை மாசுபடுத்துவதாலும் சென்னை ஐகோர்ட் ஆலையை நிரந்தரமாக மூடிட உத்தரவு பிறப்பித்தது. ஆலை தொடர்ந்து இயங்கினால் லட்கணக்கான மக்களுக்கு உடல்நலக்கேடு ஏற்படும் என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஆலையை இயக்குவதற்கு லைசென்சுக்காக 15 நாட்களுக்குள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும், லைசென்ஸ் கொடுப்பதா? இல்லையா? என்பதை நன்கு ஆய்வு செய்து வாரியம் முடிவு எடுக்கவேண்டும் என்றும் அடுத்த விசாரணை 2012 மார்ச் 28 ம் தேதி நடக்கும் எனவும் அறிவித்தனர். வழக்கில் வைகோவுடன், ம.தி.மு.க.,சட்டத்துறைச் செயலாளர் யு. தேவதாஸ், வக்கீல்கள் டில்லி ரவி, பாலாஜி, ஆசைத்தம்பி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளையின் வக்கீல் பிரகாஷ் ஆகியோர் ஆஜராகினர். 

Jan 16, 2012

கை கொடுப்போம் ... "தானே" துயர் துடைப்போம் !

'தானே’ புயலின் கோரத் தாண்டவம் ஏற்படுத்திய அழிவுகளில் இருந்து கடலூர், புதுச்சேரி மக்களை மீட்டு எடுப்பதற்கான எண்ணங்களை கடந்த இதழில் உங்களிடம் கேட்டிருந்தோம். இதழ் வெளியான ஒரு சில மணி நேரத்தில் இருந்தே தொலைபேசிக் குரல் பதிவிலும், மின் அஞ்சல் மூலமாகவும், குறுஞ்செய்தியாகவும் உருக்கமான இதயத்தோடு பிரமிப்பான யோசனைகளை நீங்கள் குவிக்கத் தொடங்கி விட்டீர்கள்.


உலகமே திடுக்கிட்டு கண்ணீர் வடித்த சுனாமியின் அழிவுகள்

 ஒரு வகை என்றால்... கடலூர், புதுச்சேரி, நாகை மாவட்டத்தின் சில பகுதி மக்களையும் உயிரோடு நடைபிணங்களாக மாற்றிவிட்ட 'தானே’ புயலின் பேரழிவு இன்னொரு விதமான பெரும்சோகம். 'கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் ஆகும் - இந்த மக்கள் முழுமையாக மீண்டு வர!’ என்று நிபுணர்கள் சிலர் சொல்வதைக்கேட்டால், நடுக்கம் அதிகமாகிறது. புயல் முடக்கிப்போட்ட பலா, முந்திரி மரங்களை அங்கே இருந்து

Jan 15, 2012

தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு

தமிழகத்தில்இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடக்குமா, நடக்காதா? என, பெரிய சட்டபோராட்டமே நடந்தது. காளைகளை சாகசக்காட்சி விலங்குகளாக பயன்படுத்த தடை விதித்து, 2011 ஜூலையில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி, ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க கோரி பிராணிகள் நலவாரியம், விலங்குகள் நல ஆர்வலர்கள் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தனர். சுப்ரீம் கோட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது,பொங்கல் திருவிழாவான இன்று, குதூகலத்துடன் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் துவங்குகின்றன. ஐகோர்ட் உத்தரவுப்படி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துள்ளி வரும் காளைகளை அடக்க இளம் காளையர்கள் தயாராகிவிட்டனர்.

தமிழக அரசிடம் கருத்து கேட்காமல் வெளியிட்ட மத்திய அரசின் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வழக்குத் தொடர்ந்தனர். நீதிபதிகள், ""ஜல்லிக்கட்டு நடத்த இடைக்கால அனுமதி அளிக்கப்படுகிறது. சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் விதித்துள்ள அனைத்து விதிமுறைகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ஜல்லிக்கட்டு நடந்தது தொடர்பாக, ஜன., 30ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தால், இந்த உத்தரவு மறுபரிசீலனை செய்யப்படும்,'' என உத்தரவிட்டனர்.