Jan 27, 2012

அண்ணாவின் நூல்கள்

         தமிழ்நாட்டு மக்களின் மனமாசுகளை அகற்ற வேண்டும், மறுமலர்ச்சியினைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற எண்ணங்களோடு தன் இலக்கியப் பணியைச் செய்தவர். அறிஞர் அண்ணா அவர்கள் தமிழக அரசியல் வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்தியவர். திரையுலகில் திருப்பு முனையை உண்டாக்கியவர். சொக்க வைக்கும் எழுத்து நடையால் கதை, கட்டுரை, புதினம், நாடகம் எனப் பல துறைகளிலும் முத்திரை பதித்தவர். பேனா முனையின் வலிமையை நிரூபித்தவர் பேரறிஞர் அண்ணா 


அண்ணா எண்ணாத துறையே இல்லை. கதைகளால், நாடகத்தால், கட்டுரைத் திறத்தால், பேச்சால் சிதைவிலாக் கருத்தை ஆக்கி சிந்தனை விருந்து வைக்கும் புதையலாய் விளங்கினார் அண்ணா

Jan 25, 2012

முடியவில்லை மொழிப்போர்!


மொழிப் போர் தியாகிகளுக்கு
வீரவணக்கம் !

மடியவில்லை நீங்கள் !
முடியவில்லை மொழிப்போர்!

முல்லை பெரியாராய் தொடர்கிறது!
சூளுரைப்போம் சுடர் முகம் தூக்குவோம் !!

வா.கோவிந்தராஜ்,B.A.,









Jan 23, 2012

வெற்றியடய உங்களது செயல்பாட்டில் நீங்கள் செய்யவேண்டியது!

       வெற்றியடய, நமது தோல்விகளை நினைத்து நொந்து கொள்ளும் அதேநேரத்தில், அதற்கான காரணம் குறித்து எத்தனை பேர் முறையாக ஆய்வு செய்கிறோம்? பலவிதமான திறமைகளையும், ஆற்றல்களையும் கொண்டிருக்கும் நாம், அவைகளை முறையாக பயன்படுத்தவிடாமல் தடுக்கும் பலவீனங்களை அடையாளம் கண்டு களையாமல் இருப்பதால்தான், நம்மால் எதையும் சாதிக்க முடிவதில்லை. உதாரணமாக, ஒருவர் வரலாற்றுப் பாடத்தில் சிறந்த பகுப்பாய்வு திறனும், நல்ல விஷய ஞானமும் கொண்டிருப்பார். ஆனால், வரலாறு தொடர்பான போட்டித் தேர்வில் அவரால் தேர்ச்சிப் பெற முடியாது. ஒருவர், நடைமுறை ரீதியாக கணிதத்தில் சிறந்த வல்லுநராகவும்