Mar 25, 2013

அக்டோபர் மாதம் முதல், ரோமிங் கட்டணம் நீக்கப்படும்; அமைச்சர், கபில் சிபல்

டில்லியில் நடந்த, தேசிய, பத்திரிகை ஆசிரியர்கள் மாநாட்டில், அமைச்சர், கபில் சிபல் பேசியதாவது: ""அக்டோபர் முதல், ரோமிங் கட்டணம் அகற்றப்படும். நாட்டில், எங்கிருப்பவர்களும், எந்த இடத்திற்கும் கூடுதல் கட்டணம் இல்லாமல் பேசலாம்,'' என, மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர், கபில் சிபல் கூறினார். இணையதளம், சுதந்திரமான ஊடகமாக தொடர்ந்து விளங்கும். அதை கண்காணிக்கும் எண்ணம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை. கம்ப்யூட்டர் சிப் உற்பத்திக்கு, முக்கியத்துவம் கொடுக்கப்படும். வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்கள், இந்தியாவில், கம்ப்யூட்டர் சிப் தயாரிக்க முன் வந்தால், வரிச்சலுகை போன்றவை வழங்கப்படும். அக்டோபர் மாதம் முதல், ரோமிங் கட்டணம் நீக்கப்படும்; நாட்டில் எந்த பகுதியில் இருப்பவர்களும், பிற பகுதியில் உள்ளவர்களை, எத்தகைய கூடுதல் கட்டணமும் இன்றி தொடர்பு கொள்ள முடியும். இவ்வாறு, அமைச்சர், கபில் சிபல் கூறினார்.

No comments: