Nov 17, 2017

பிணமலரா? புரளிமலரா?

பிணமலர் ரொம்பவே பொங்கி பொங்கி வழியுது! யோக்கிய சிகாமணி போல பத்திரிகைகளில் வதந்திகளைப் போட்டு பெரிதுபடுத்தி தனது பிழைப்பை நடத்தி வரும் இந்த மஞ்சள் பத்திரிகை தேசிய நாளேடு என்ற பெயரில் துவேச நாளேடாக வந்து-கொண்டிருக்கிறது. ஏற்கெனவே அதன் உரிமையாளரின் மகன் ஒருவர் தன் அலுவலகத்தில் பெண்--ணிடம் வாலாட்டி போலீசில் அடிவாங்கிய செய்தி அனைவருக்கும் தெரியும். பல இடங்களில் பிளாக்-மெயில் செய்து ரியல் எஸ்டேட் செய்பவர்களிடமிருந்து பணத்தைக் கறந்து தனது பிழைப்பை பிணமலர் நடத்தி வருகிறது. ‘நமது சிறப்பு நிருபர்’ என்ற பெயரில் செருப்பு நிருபர் ஒருவரை வைத்து செய்தி-களை இட்டுக்கட்டி உண்மைக்குப் புறம்-பாக செய்திகளை வெளியிட்டு வருகிறது. தனது அந்த செருப்பு நிருபர் நேரில் இருந்து பார்த்ததுபோல் “கரன்சி நோட்டுகளை வருமான வரித் துறையினர் கைப்பற்றினார்கள்” என்ற பொய்ச் செய்தியை பிணமலரில் வெளி-யிட்-டிருக்கிறது. 2005&2006&ல் மதுரை புறநகர்ப் பகுதியில் கல்லூரி கட்ட புறம்போக்கு நிலத்தை பிணமலர் நிர்வாகத்தினர் வளைத்தார்கள். பொதுமக்களின் புகாரின்பேரில் புரட்சித்-தலைவி அம்மா அவர்களின் அரசு நட-வடிக்கை எடுத்து நோட்டீஸ் அனுப்பி-யது. அம்மா அவர்களிடம் அனுமதி வாங்குவதற்காக சின்னம்மா அவர்களிடம் கெஞ்சி அந்த இடத்தை ஒதுக்கித் தரும்-படி கேட்-டார்கள். சின்னம்மா அவர்கள் மறுத்து-விட்டார்கள். ஏமாற்றத்தில் விரக்தியடைந்த புறம்போக்கு பிணமலர் அன்றிலிருந்து இன்று-வரை பொய்ச் சங்கு ஊதி ஊதி செய்திகளைப் போட்டு வருகிறார்கள்.
புரளிகளில் எத்தனை வகை உண்டோ, எத்தனை நிறம் உண்டோ அத்துணை வகைகளையும் தன்னகத்தே கொண்டு தமிழ்நாட்டில் இப்படியரு புரளி நாளேட்டை யாராலும் நடத்த முடியாது என்று சவால்-விட்டு தினமலர் தனது தில்லாலங்கடி வேலையை செய்து 
வருகிறது. பத்திரிகை துறையின் களங்கமாக விளங்கி வரும் பிணமலர் தினம் தினம் வெளிவந்து தினக்கழிவுகளாக மாறி வருவதாக தமிழக மக்களும் மற்றும் ஊடகங்-களும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள். மரநாய்களால் மகாமந்திரம் எழுத முடியாது! கழுதைப் புலிகளால் வீர காவியம் படைக்க முடியாது! ஓநாய்களிடம் ஒழுக்கத்தைக் காண முடியாது! காட்டுப் பன்றிகளிடம் கண்ணி-யத்தைக் காண முடியாது. அதுபோல தினமலரிடம் உண்மையை, நேர்மையை தேடினாலும் கிடைக்காது! விரைவில் திரை விலகும்! பொய் மூட்டைகள் உடைக்கப்படும்! பிணமலரின் வாசம் தேடி ஈக்கள்கூட நெருங்காது!  
சோழா அமுதன்

No comments: