Showing posts with label போலீஸ் என்கவுண்டர். Show all posts
Showing posts with label போலீஸ் என்கவுண்டர். Show all posts

Nov 30, 2012

மதுரையில் போலீஸ் என்கவுண்டர்

போலீசாரை தாக்கிவிட்டு இரண்டு கைதிகள் தப்பியோடினர். திருப்பாச்சேத்தி அருகே எஸ்.ஐ., ஆல்வின் சுதன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான பிரபு மற்றும் பாரதி ஆகியோரை கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு போலீசார் திருப்பி அழைத்து வந்த போது, மதுரை லேக்வியூ அருகே போலீசாரை தாக்கிவிட்டு அவர்கள் தப்பியோடினர்,தங்களை தற்காத்து கொள்ள  போலீஸ்  துப்பாகியால் சுட்டனர்
:""போலீசாரை தாக்க முயன்றதால், ரவுடிகள் பிரபு, பாரதியை சுட்டேன்,'' என, டி.எஸ்.பி., வெள்ளத்துரை கூறினார்.எஸ்.ஐ., ஆல்பின் சுதன் கொலை வழக்கில் கைதான ரவுடிகள் இருவரும், மானாமதுரை ராஜகம்பீரம் கால்பிரவு கிராமம் அருகே, நேற்று, "என்கவுன்டரில்' கொல்லப்பட்டனர்.இதுகுறித்து வெள்ளத்துரைகூறியதாவது: போலீசாரிடம் இருந்து தப்பிய இருவரையும் பிடிக்க போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். இருவரும் தங்கள் சொந்த ஊருக்கு வரலாம் என்பதால், அப்பகுதியில் சோதனை நடத்தினோம்.அப்போது பைக்கில் வந்த இருவரும் போலீசாரை நோக்கி, பெட்ரோல் குண்டு வீசினர். அரிவாள் வைத்திருந்தனர். போலீசாரை பாதுகாக்க இருவரையும் சுட்டேன், என்றார்.