Oct 31, 2011

நடிகை மனோரமாவுக்கு நாளை (01/11/2011) ஆபரேஷன்



பழம்பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா, சில நாட்களுக்கு முன் குடும்பத்துடன் காளஹஸ்தி கோவிலுக்கு சென்றார். அப்போது அங்குள்ள விருந்தினர் இல்லத்தில் தங்கினார் பாத்ரூமில் வழுக்கி விழுந்தார். இதில் அவரது தலையில் அடிபட்டது.  அடிபட்ட இடத்தில் அவருக்கு மீண்டும் வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள்.
  தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், மனோரமாகோமாநிலைக்குச் சென்றுவிட்டதாகவும், கவலைக்கிடமாக உள்ளதாகவும் வதந்தி பரவியது. இதனால், திரையுலகினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது
அவரை பார்ப்பதற்கு பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை.
டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்ததின் பேரில் நேற்று அவருக்கு லேசாக நினைவு திரும்பியது. டாக்டர்கள் அவர் பெயரை சொல்லி அழைத்த போது லேசாக கண் திறந்தார்.

மனோரமாவின் மகன் , அம்மா இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். அவரது தலையில் ரத்த உறைவு ஏற்பட்டுள்ளதால், அதை ஆபரேஷன் மூலம் நீக்க டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். நாளை (01/11/2011)ஆபரேஷன் நடக்கிறதுஎன்றார்.

No comments: