Nov 30, 2011

அழகிரி வீட்டில் கனிமொழி

கனிமொழி சென்னைக்கு வருவதையொட்டி அவரை வரவேற்பதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து திமுகவினர் திரள்கிறார்கள்.  

மதுரையில் இருந்து மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள்

திகார் சிறையில் இருந்த கனிமொழி எம்.பி.க்கு நேற்று டெல்லி ஐகோர்ட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.


 இரவு 7.30 அளவில் கனிமொழி திகார் சிறையில் இருந்து விடுதலை ஆனார்.

இன்னும் 3 நாட்கள் சிபிஐ தரப்பு நடைமுறைகளை முடிக்க வேண்டியிருப்பதால்,   கனிமொழி டெல்லியிலேயே தங்க வேண்டிய சூந்நிலை உள்ளது.   இதனால் அவர் டெல்லியில் உள்ள அழகிரி வீட்டில் தங்கியுள்ளார்.


கனிமொழி,  டிசம்பர் 3ம் தேதி சென்னை வருகிறார்.  டிசம்பர் 6ம் தேதி வரை சென்னையில் இருக்கும் கனிமொழி, பின்னர் மீண்டும் டெல்லிக்குச் செல்கிறார்.   டெல்லியில் அழகிரி வீட்டில் இருந்தபடியே வழக்கு விசாரணைக்கு ஆஜர் ஆகவிருப்பதாக தெரிகிறது.

No comments: