Nov 16, 2011

பெண் குழந்தை பிறந்தது.உலக அழகி ஐஸ்வர்யாராய்க்கு




நடிகை ஐஸ்வர்யாவுக்கு 11&11&11ல் குழந்தை பிறக்கும், ஆணா, பெண்ணா என்று கூறி ‘பெட்’ கட்டி ரூ.150 கோடிக்கு சூதாட்டம் நடைபெற்றதாக செய்திகள் வெளியாகின. ஆனால், 11ம் தேதி குழந்தை பிறக்கவில்லை.


இந்நிலையில், ஐஸ்வர்யா ராய்க்கு கடந்த 14ம் தேதி லேசான பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்குள்ள 5வது மாடியில் சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.


அமிதாபச்சன், அபிஷேக் பச்சன், நாத்தனார் சுவேதா நந்தா மற்றும் ஐஸ்வர்யா ராய் குடும்பத்தினர் அனைவருமே மருத்துவமனையில் உடன் இருந்தனர்.

வரும் 17ம் தேதி (வியாழக்கிழமை) பிற்பகல் ஐஸ்வர்யாவுக்கு குழந்தை பிறக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையின் இன்று (16.11.2011 ) ஐஸ்’ஸுக்கு பெண் குழந்தை பிறந்தது.

No comments: