Showing posts with label உலக செய்திகள். Show all posts
Showing posts with label உலக செய்திகள். Show all posts

Jan 1, 2012

சுவிஸ் பார்பதுக்கான போட்டி விவரங்கள் உள்ளே

சைட் சீயிங்
தங்க குடில்

செலவழிக்க பணம்
ஊர்சுத்த டிக்கெட் 
 


அனைவரைக்கும்  புத்தாண்டு வாழ்த்துக்கள் 
பதிவர்கள்  அனைவரையும் சுவிஸ் பார்க்க வச்சுட்டேன் நன்றி 
புத்தாண்டு  அதுவுமா திட்டக்கூடாது கமெண்ட்ஸ் மட்டும் போட்டுட்டு போங்க !






Dec 24, 2011

மார்பகங்களை மாற்றுவதற்கு அரசே நிதியுதவி! (இத படிங்க முதல்ல )


மார்பகங்களை பெரிதுபடுத்திக் காண்பிப்பதற்காக பல்லாயிரக்கணக்கான பிரஞ்சுப் பெண்களால் மார்பகங்களில் பொருத்தப்பட்ட சிலிக்கன் உள்ளீடுகளில் குறை காணப்படுவதால், அவற்றை அவர்கள் அனைவரும் நீக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
இதற்கான அறுவைச் சிகிச்சைகளை செய்வதற்கான பணத்தை தமது பொதுச் சுகாதார நிதியில் இருந்து வழங்குவோம் என்று கூறியுள்ள பிரஞ்சு அரசாங்கம், இப்படியான உள்ளீடுகளை மார்பகங்களில் பொருத்திய பெண்கள் அனைவரும் அவற்றை அகற்றிக்கொள்ள வேண்டும் என்று கேட்டிருக்கிறது

Dec 23, 2011

நியூசிலாந்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் (படங்கள்)

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் இன்று காலை 5.8 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அதிகாலை 1.58 மணியளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. வீட்டில் இருந்த பொருட்கள் கீழே உருண்டன. தூங்கி கொண்டிருந்த மக்கள் பதறியடித்து வீதிகளுக்கு ஓடி வந்தனர். பின்னர் 70 நிமிடங்கள் கழித்து அடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் செல்ல பயந்து தெருக்களிலேயே இருந்தனர். நிலநடுக்கத்தால் ஷாப்பிங் மாலில் இருந்த ஒருவர் காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பல பகுதிகளில் தொலைதொடர்பு, மின்சார சேவை துண்டிக்கப்பட்டது. பாதுகாப்பு நடவடிக்கையாக கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையம், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. நிலநடுக்கத்தால் உயிரிழப்பு, பெரிய அளவில் சேதம் எதுவும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். நியூசிலாந்தில் கடந்த பிப்ரவரியில் 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 181 பேர் பலியாயினர். அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் நியூசிலாந்து அமைந்துள்ளது. அங்கு ஒரு வருடத்தில் சுமார் 15 ஆயிரம் முறை நில அதிர்வுகள் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Dec 15, 2011

பாகிஸ்தானுக்கு ரூ3,500 கோடி நிதியுதவி அதிரடியாக ரத்து அமெரிக்காவில் சட்டம் நிறைவேறியது


பாகிஸ்தானுக்கு வழங்கும் ரூ.3,500 கோடி நிதியுதவியை ரத்து செய்வதற்கான சட்டம், அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதையடுத்து பாகிஸ்தான்  அமெரிக்க உறவில் நெருக்கடி முற்றியுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதிகளை, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை வீரர்கள் அழித்து வருகின்றனர். தீவிரவாதிகளும் நேட்டோ படைகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதில் அமெரிக்க வீரர்கள் பலர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் பாகிஸ்தான் மலைப் பகுதிகளில் நேட்டோ விமானங்கள் திடீர் தாக்குதல் நடத்தியதில், 24 பாகிஸ்தான் வீரர்கள் பலியாயினர். இதற்கு பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, பிரதமர் கிலானி, ராணுவ தளபதி கியானி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Dec 14, 2011

சேஷல்ஸ் தீவில் அமெரிக்க உளவு விமானம் வீழ்ந்து நொருங்கியுள்ளது


அமெரிக்க உளவு விமானம் சேஷல்ஸ் தீவில் உள்ள லன்வேயில் தரையிறங்குமுன்  வீழ்ந்து நொருங்கியுள்ளது. சமீபத்தில்தான் அமெரிக்க உளவு விமானம் ஒன்றை ஈரான் கைப்பற்றியதாக செய்தி வெளியாகி, அந்தப் பரபரப்பு இன்னமும் ஓயவில்லை.

கிழக்கு ஆபிரிக்கக் கடலில் கொள்ளையர்களின் நடமாட்டங்களை உளவு பார்க்கும் அமெரிக்க விமானமே

தென் கொரியாவில் இரட்டை கோபுரம் இடிவது போன்ற வடிவத்தில் ஒட்டல்,


அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள இரட்டை கோபுரத்தை தீவிரவாதிகள் விமானத்தை மோதவிட்டு தகர்த்தனர். அப்போது கட்டிடம் தகர்ந்து புகை கிளம்பியது, விமானம் மோதும்போது கட்டிடம் எப்படி தோற்றம் அளித்ததோ அதே போன்ற வடிவில் தென் கொரியாவில் உள்ள சியோல் நகரில் கட்டிடம் ஒன்றை கட்ட உள்ளனர்.

இந்த கட்டிடத்தை நெதர்லாந்து நாட்டை சேர்ந்த எம்.வி. ஆர்.டி.வி என்ற கட்டிட நிறுவனம் வடிவமைத்து உள்ளது. கட்டித்தில் புகை தெரிவது போன்ற இடத்தில் இரு கட்டிடத்தையும் இணைத்து உள்ளனர். அதில் ஒட்டல், பூங்கா , நீச்சல் குளம் போன்றவை அமைக்கப்படுகிறது.

Dec 12, 2011

சீனா ராணுவதளம் இந்திய பெருங்கடலில் அமைக்கிறது இந்திய கடற்படை கவலை! ( காணொளி)


இந்திய பெருங்கடலின் ஷெசல்ஸ் தீவில் தங்கள் நாட்டின் ராணுவ தளத்தை அமைக்க இருப்பதாக சீனா அறிக்கை விடுத்துள்ளது. சீனாவின் இந்த அறிவிப்பினால் இந்தியா பெருங்கவலை அடைந்துள்ளது. கண்காணித்து வருகிறது. ஆப்பிரிக்க கண்டத்துக்கு கிழக்கே உள்ள இந்த ஷெசல்ஸ் தீவில் தங்கள் நாட்டின் ரணுவத் தளத்தை அமைப்பதால், இந்தியாவை சீனா உளவு பார்ப்பதற்கும் இது வசதியாகி வடும் என்று இந்தியா பெரும் கவலையடைந்துள்ளது. 

Dec 11, 2011

அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்து; இந்திய தம்பதிகள் உள்பட 5 பேர் பலி


அமெரிக்காவில் லாஸ்வேகாசில் இருந்து சன்செட் நகரில் உள்ள ஹுவர் அணைக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது.

லேக்மியாட் என்ற இடத்தில் மலைப்பகுதியில் சென்றபோது திடீரென வெடித்து சிதறியது. அதில், விமானி லாஸ்வேகாசை சேர்ந்த நியல்டு (31), டெல்லி தம்பதி டெல்வின் (49), தமரா சாப்மான் (49) உள்பட 5 பேர் பலியாகினர். 

தங்களின் 25-வது ஆண்டு திருமண விழாவை கொண்டாட வந்தபோது விபத்தில் சிக்கி தம்பதிகள் பலியாகி விட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.



Dec 10, 2011

அமெரிக்கா தாக்குதல் நடத்தப்போவதாக ஆப்கானிஸ்தான் எல்லையில் பாக். விமானப்படை குவிப்பு


ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க கூட்டுப்படைகள் கடந்த மாதம் 26-ந்தேதி பாகிஸ்தானில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 24 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதை தவறுதலாக நடந்துவிட்ட தாக்குதல் என்று அமெரிக்கா கூறியது. ஆனால் திட்டமிட்டே இந்த தாக்குதலை அமெரிக்கா நடத்தியதாக பாகிஸ்தான் கருதுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி உடல்நிலை பாதிக்கப்பட்டு துபாய் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ராணுவ பலம்: சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!


சீனா தனது ராணுவ பலத்தை மறைமுகமாக வெளிப்படுத்தக் கூடாது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. 

இதுகுறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகனின் செய்தி தொடர்பாளர் ஜார்ஜ் லிட்டில் கூறுகையில், "சீனாவுக்கு அதன் ராணுவ பலத்தை அதிகரிக்க முழு உரிமை உள்ளது. ஆனால், அது முழுமையான வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும். 

Dec 5, 2011

50 லட்சம் கோடி ரூபாய்: இந்திய மக்களிடம் உள்ள தங்கத்தின் மதிப்பு

இந்தியர்களால் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தங்கத்தின் மதிப்பு 95 ஆயிரம் கோடி டாலர்கள் அதாவது சுமார் 50 லட்சம் கோடி ரூபாய்கள் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தியாவில் மக்கள் நகைகளாகவும், தங்கக்காசுகளாகவும் சேர்த்துவைத்திருக்கும் இந்த தங்கம், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 50 சதவீதமாக இருக்கலாம் என்று சர்வதேச ஆய்வு நிறுவனமான மக்குவேரி தெரிவிக்கிறது.இந்தியர்களின் தனிப்பட்ட சேமிப்பாக இருக்கும் தங்கம் உலகின் மொத்த தங்கக் கையிருப்பில் சுமார் 11 சதவீதமாக இருக்கும் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

பேஸ்புக்கினால் அம்பலமான அதிபரின் லீலை (பட இணைப்பு)


அமெரிக்க நியூயோர்க்கைச் சேர்ந்த பள்ளியொன்றின் அதிபர் ஒருவர் தனது புகைப்படமொன்றினால் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். 

செரொன் ஸ்மால்ஸ் என்ற அவர் வாலிபர் ஒருவருடன் நடனம் புரியும் அப்புகைப்படம் அவர் அதிபராக பணியாற்றும் உயர் பள்ளி மாணவர்களிடையே பரவியதாலேயே இச் சர்ச்சை கிளம்பியுள்ளது. இப்புகைப்படத்தினை தனது பேஸ்புக் கணக்கில் தரவேற்றியுள்ளார். தனைத் தொடர்ந்தே இப் புகைப்படம் மாணவர்களிடையே பரவத்தொடங்கியுள்ளது. 

கல்வி நடவடிக்கைகளில் பங்குபற்றாத மாணவர்களுக்கு புள்ளி வழங்கியமைதொடர்பில் இவர் மீது ஏற்கனவே விசாரணைகள் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 
இந்நிலையில் இப்புகைப்படமும் இவ்வரிசையில் சேர்ந்துள்ளது. 

இவரது நடத்தை தொடர்பில் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இப் பள்ளியை வழிநடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

Dec 4, 2011

96 ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைக்கப்பட்ட கோக் பாட்டில் 1.22 கோடிக்கு ஏலம் !


உலக புகழ் பெற்ற குளிர்பானம் ‘கோக கோலா’. அமெரிக்காவின் கொலம்பஸ் நகரை சேர்ந்த பார்மசிஸ்ட் ஜான் ஸ்டித் பெம்பர்டன் என்பவர் 1886ல் இந்த பானத்தை கண்டுபிடித்தார். ஆசா காண்ட்லர் என்பவர் 1889ல் இதன் தயாரிப்பு உரிமையை பெற்று, 1892ல் தி கோக கோலா கம்பெனியை தொடங்கினார்.
அந்த கால கட்டத்தில், தற்போதைய சென்ட் பாட்டில், ஒயின் பாட்டில் வடிவத்தில் கோக் வெளிவந்தது.

விக்கிலீக்ஸ் வெளியிடுகிறது:வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை வைத்துள்ள இந்தியர்கள் பற்றிய முழு விவரத்தை

இந்திய அரசு இந்த கறுப்பு பணம் வைத்துள்ளவர்களின் பெயர்களை வெளியிடுகிறதோ இல்லையோ, அசாஞ்சே அந்த பட்டியலை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

அயல்நாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களை பற்றிய முழு விவரத்தை பெற்று வெளியிடுவதில் மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு அக்கறை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.அயல்நாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பெயர்களை விரைவில் வெளியிடுவேன் என்று விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தெரிவித்துள்ளார்.

சீனா சுரங்கத்தில் அணு ஆயுதங்கள் :அச்சத்தில் அமெரிக்கா!


சீனாவானது பல ஆயிரம் மைல்கள் நீளமான சுரங்கத்தில் அணு ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இதன்படி சீனா சுமார் 3000 வரையான அணு ஆயுதங்களை கொண்டிருப்பதாக அவ் ஆய்வில் தெரியவந்துள்ளது.

சுமார் 3 வருட ஆராய்ச்சிக்குப் பின்னரே இத் தகவலை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

செயற்கைக்கோள்களின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட புகைப்படங்கள், இரகசிய ஆவணங்களை மொழிபெயர்த்துமே இம் முடிவினை வெளியிட்டுள்ளனர்.

ஹிலாரி கிளிண்டனுக்கு துணை அதிபர் பதவி இல்லை. ஒபாமா


அமெரிக்காவில் அடுத்த ஆண்டு  நடைபெற உள்ள தேர்தலில் அதிபர் பதவிக்கு பராக் ஒபாமாவும், துணை அதிபராக ஜோ பிடெனும் களமிறங்குவார்கள். இத்தகவலை வெள்ளை மாளிகை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

இப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள ஹிலாரி கிளிண்டன், துணை அதிபராக களமிறக்கப்படுவார் என முன்னர் யூகங்கள் வெளியாயின. ஆனால் அவற்றையெல்லாம் பொய்யாக்கும் வகையில் இப்போது அதிபராக உள்ள ஒபாமாவும், துணை அதிபராக உள்ள ஜோ பிடெனும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மின்னஞ்சல்கள்,தொலைபேசிகள் சீனாவால் திருடப்படுகின்றன. ஜூலியன் அசாஞ்


டில்லியில், நேற்று நடந்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் நிகழ்ச்சி ஒன்றில், வீடியோ கான்பரன்ஸ் மூலம், லண்டனில் இருந்து விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் பேசினார். அவர் கூறியதாவது: வெளிநாடுகளில், இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப்பணம் பற்றிய தகவல்கள், அவர்களின் வங்கிக் கணக்குகளுடன், அடுத்தாண்டு வெளியிடப்படும்.

சி.பி.ஐ., மின்னஞ்சல்களில் இருந்து, சீன உளவுத் துறை தகவல்களைத் திருடியதற்கு, என்னிடம் ஆதாரங்கள் உள்ளன. இந்தியாவின் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் தொடர்புகளை, மேற்கத்திய நாடுகள் ஒட்டுக் கேட்டு வருகின்றன. அதனால், இந்தியா, பாதுகாப்பான தகவல் தொடர்பை கையாள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது, என்றார்.

சிரியாவுக்கு அதி நவீன ஏவுகணைகளை ரஷ்யா வழங்கியுள்ளது.


சிரியாவுக்கு அதி நவீன ஏவுகணைகளை ரஷ்யா வழங்கியுள்ளது. சிரியாவில் அந்நாட்டு ஜனாதிபதி பஷர் அல்-அசாத்திற்கு எதிர்ப்புகள் வலுத்துவரும் நிலையில் கப்பல்களை அழிக்கும் ஏவுகணைகளை அனுப்பி வைத்துள்ளது. 

இது 300 கி.மீ., தொலைவில் உள்ள இலக்கினைத் தாக்க வல்லது. 

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இவ் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

கொழும்பில் இத்தாலிய மொடல் அழகிகள்..! _



Sri Lanka Design Festival நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்த இத்தாலிய மொடல் அழகிகள்
சிறப்பு விமானத்தில் இலங்கையின் பல்வேறு இடங்களுக்கும் சென்றனர். 
அவர்கள் கொழும்பு கங்காரம பகுதிக்கு வந்தபோது எடுக்கப்பட்ட படங்கள்





பாகிஸ்தானில் கடத்தப்பட்ட அமெரிக்கரை விடுவிக்க அல் கய்தா நிபந்தனை !


பாகிஸ்தானில் அமெரிக்கர் ஒருவரை அல் கய்தா தீவிரவாதிகள் கடத்தி உள்ளனர். இதனால் பாகிஸ்தான்  அமெரிக்கா உறவில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் அல் கய்தா, தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஈடுபட்டுள்ளன. அமெரிக்கர்களை குறி வைத்து தீவிரவாதிகளும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேட்டோ படை தாக்குதலில் 24 பாகிஸ்தான் வீரர்கள் சமீபத்தில் பலியானது சர்வதேச அளவில் சர்ச்சையை எழுப்பி உள்ளது. Ôஇன்னொரு முறை இதுபோல் தாக்குதல் நடந்தால், நேட்டோ படைகள் மீது பதிலுக்கு தாக்குதல் நடத்துவோம்Õ என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி கயானி எச்சரித்துள்ளார்.